Monday, April 2, 2012

அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனைமட்டும் நினைவு கூறும் போதுதான் மனம் அமைதி அடையும்………….



அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனைமட்டும் நினைவு கூறும் போதுதான் மனம் அமைதி அடையும்………….

உலகத்தில் மனிதன் பலவற்றை ஆராதிகின்றான் அவற்றில் கல்லு கரடு முள்ளு முரடு பாம்பு பறவை மற்றும் மிருகங்கள் மனிதர்கள் என்று உயிர் உள்ளவைகளும் உயிர் அற்றவைகளும் உள்ளன.
ஆனாலும் மனிதன் எல்லாவற்றிலும் சரணம்(பாதுகாவல்  சாந்தி ) தேடுகிறான்.
மனிதனே   ஒன்றை படைத்தது  தான் படைத்தவை தன்னை எல்லா பேராபத்துகளிலிருந்தும் தங்களை காப்பாற்றும் என்றும் நினைத்தும் கொண்டிருக்கின்றான்.

இவர்களுக்கு துன்பம்  நேரிடும்போது  இவர்களே படைத்த அவைகளை அழைத்தால் எல்லாவற்றிலிருந்தும் தங்களுக்கு பாதுகாவல் மற்றும் மோக்ஷம் சாந்தி (மனஅமைதி ) தரும் என்றும் உண்மையாக நம்பிக்கொண்டும் இருக்கி ன்றான்.
இப்படிஇவர்கள் நம்புவதற்கு  இவர்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும் கூட .......... அதில் திட நம்பிக்கை கொண்டுள்ளான்.

மனிதர்கள் நாகரிகத்தில்எவ்வளவுதான் முன்னேறி  இருந்தாலும் இவ்விஷயத்தில் படு மூடனாகவே  இருக்கின்றான்.

பாவம் மனிதன்  தன்னுடைய  உண்மையான  படைப்பாளனாகிய அல்லாஹுவை அறியாமல் கண்ணில் காணும் எவற்றையல்லாமோ கண்டு  இவைகள் தான் நம்மை படைத்தது என்று நினைத்து  அவற்றையல்லாம் வணங்கி  வாழ்க்கையின்  லட்சியத்தை அறியாதவனாக அலை பாய்ந்து கொண்டிருக்கின்றான். ஹோ மஹா கஷ்ட்டம்.?

தெய்வம் என்றால் நாம் படைத்த பொருளாக இருக்ககூடாது
நம்மை படைததாக இருக்கவேண்டும்.
படைத்தவன் பற்றி குர் ஆன்  கூறுகிறது  இப்படி
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே(அல்லாஹுவையே ) வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.                              குர் ஆன் 2:21.
பாருங்கள் நம்மையும் நம்முடைய முன்னோர் களையும் படைத்தது யார் என்று.   மட்டுமல்ல அவன் எத்தகயவன் என்றால்.
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
(அல்லாஹுவே ) வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள் 2:22.
மட்டுமல்ல அல்லாஹ்  நமக்கு வேண்டிஉலகத்திலுள்ள அனைத்தையும்
படைத்தான்.
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே
உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். 2:29.

யாராலும் படைக்கப்படாத உலகத்தில் எல்லாவற்றையும் படைத்த ஷ்ர்வேஸ்வரனான  ஜெகாதிபதியான  பரம்பொருளான  பரபிரம்மனான ஜெகநியந்தாவான யார் கண்களுக்கும் தெரியாதவனான
எல்லாகண்களையும் பார்துகொண்டிருப்பவனான உலக ரக்ஷகனான 
அல்லாஹு வை மட்டும் அழைக்கும் போதுதான்  மனம் அமைதி அடையும் வாழ்கை மோக்ஷம் அடையும்
ஏன் என்றால்  உலகத்தில் மற்ற எல்லா  கடவுள் களைப்போல மனிதனால் உருவாக்க பட்ட கடவுள் அல்ல அல்லாஹ்........... உலகத்தையே உருவாகிய உண்மையான ரக்ஷகன் படைப்பாளன் அல்லாஹ் ஆக்குபவன் அல்லாஹ் அழிப்பவன் அல்லாஹ் காக்குபவன் அல்லாஹ்  பரிபலகன்  அல்லாஹ் ஜகதீஸ்வரன் அல்லாஹ்...........ஆம் ................ அல்லாஹ் அவனைதவிர  ஒரு தெய்வமும்இல்லை ............
நம் அனைவருடைய தெய்வமும்ஒரே ஒருதெய்வம் மட்டும்தான்
அது அல்லாஹு மட்டும்தான்
وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்;(அல்லாஹ்) அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 2:163.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
அல்லாஹ் அவன் ஒருவனே.112:1
اللَّهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.112:2.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.112:3.
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.112:4.
இன்னும் நம்முடைய தெய்வமாகிய அல்லாஹ் அவன் எப்படிபட்டவன் என்றால்
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ
அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்;  அவனைத் தவிர வேறு நாயன் இல்லை;  மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.59:22.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். 59:23.
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி
உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 59:24.
இப்படி பட்டஅல்லாஹுவை தவிர உலகில் மற்ற கடவுள்கள் இருக்கின்றன என்பதற்கு  யாரிடமும் எந்தவித  ஆதாரமும் இல்லவே  இல்லை  யாரிடமும் இல்லைஇருந்தால் யாராவதும் அதை கொண்டு வரட்டும்  இல்லை இல்லை மனிதர்களே  இல்லை………………………  அதனால்  அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனைமட்டும் நினைவு கூறி மன அமைதி பெற்றிடுங்கள்
அல்லா அவனை தவிர மற்றில்லைதெய்வம் ஓன்றும்.......................

K. MUHAMAD BASHEER     BASHEER COIMBATORE
basheerdawa@gmail.com
http://www.facebook.com/basheerdawa
islamicinformationmail@gmail.com
idmaile@yahoo.in
basheerdhawa@hotmail.com
Islamic information blogger
09042899396 09489969339

No comments:

Post a Comment